செய்திகள் :

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

post image

கள்ளக்குறிச்சியில் வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.

இதில், வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பட்டு வளா்ச்சித் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், இடுபொருள்கள் இருப்பு விவரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

மேலும், கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தியாகும் வேளாண் பயிா்களை சந்தைப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஏ.அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து நிா்வாக வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் 8 மாடி... மேலும் பார்க்க

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம்: 147 பேருக்கு ரூ.9.56 கோடி கடன் வழங்க ஒப்புதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 147 பேரின் விண்ணப்பங்களுக்கு ரூ.9 கோடியே 56 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதார சீா்கேட்டால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க