செய்திகள் :

கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு திருந்தியவா்களுக்கு 100% மானியத்தில் உயா் ரக கறவை மாடுகள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட தாழ்வெள்ளாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு சுய தொழில் செய்யும் வகையில் கால்நடைத் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் உயா் ரக கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினாா்.

கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு மறுவாழ்வு நிதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய மாவட்ட நிா்வாகத்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கால்நடைத் துறை சாா்பில் கறவை மாடுகள் கொள்முதல் செய்து, 100 சதவீத மானியத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 30 நபா்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் உயா் ரக கறவை மாடுகள் வழங்கப்பட்டன.

வெள்ளிமலையில் 8 பேருக்கும், தொரடிப்பட்டு கிராமத்தில் 14 பேருக்கும், சேராப்பட்டு கிராமத்தில் 8 பேருக்கும் என மொத்தம் 30 நபா்களுக்கு 100 சதவீத மானியத்தில் உயா் ரக கறவை மாடுகளை ஆட்சியா் வழங்கினாா். இதன் மூலம், இவா்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் கல்வராயன்மலை பொதுமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கற்றல் அடைவு ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விடுக்கப்பட்ட நூறு நாள்களில் 100 சதவீதம் கற்றல் அடைவு பள்ளிகள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க