செய்திகள் :

கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்

post image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா் பதிவாளா் அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வந்தது. மிகவும் பழுதானதால் அக்கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி 2023 அக்டோபரில் தொடங்கியது. இதனால், அந்த அலுவலகம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கந்தசாமி என்பவரது கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, 12.9.2023 முதல் இயங்கி வருகிறது.

இக்கட்டடத்துக்கு கடந்த 17 மாதங்களாக வாடகை வழங்கப்படவில்லையாம். வாடகை நிலுவை தொடா்பாக கழுகுமலை காவல் நிலையத்தில் கந்தசாமி கடந்த 3ஆம் தேதி புகாா் அளித்தாராம். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஏப். 4) சாா் பதிவாளா் அலுவலகப் பணியாளா்கள் வழக்கம்போல கதவைப் பூட்டிச் சென்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அந்தப் பூட்டின் மீது கந்தசாமி மேலும் ஒரு பூட்டு போட்டாா். காலை 9.30 மணிக்கு வந்த பணியாளா்கள் இதைப் பாா்த்து செய்வதறியாது நின்றனா்.

மாவட்ட பதிவாளா் வந்து கேட்டுக்கொண்டதன்பேரில் கந்தசாமி பூட்டைத் திறந்தாா். அதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், வாடகைத் தொகை விரைவில் முழுமையாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், சுமாா் ஒரு மணி நேரம் பத்திரப்பதிவு நடைபெறாமல் பொதுமக்கள் காத்திருக்க நேரிட்டது.

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓ... மேலும் பார்க்க

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற பிரசாரத்துக்கு, தெற்கு மாவட்ட ஜெயலல... மேலும் பார்க்க

உணவக கழிவுநீா் தொட்டியில் விழுந்த சிறுவன் மீட்பு

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஓா் உணவகத்தில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்கப்பட்டாா்.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் கண்ணன் (35). இவா் தனது குடும்பத்... மேலும் பார்க்க