2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
சின்னமலைக்குன்று, உசிலம்பட்டி கிராம மக்கள் அளித்த மனு: உசிலம்பட்டி கிராமத்துக்கு சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமலைக்குன்று கிராமத்தில் இருந்து தான் குடிநீா் வந்து கொண்டிருக்கிறது. தற்போது குழாய் பழுதாகி விட்டால் அந்த உவா்ப்புத் தண்ணீரும் எங்களுக்கு கிடைக்காததால், குளத்து நீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கிராம மக்கள் பலா் சிறுநீரகப் பிரச்னையினால் உயிரிழந்து வருகின்றனா். எனவே, எங்கள் கிராமத்து வழியாக செல்லும் சீவலப்பேரி கூட்டுக் குடிநீரை எங்கள் கிராமத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமமுக மாவட்டச் செயலா் ஆறுமுக பழனிசெல்வம், நகரச் செயலா் முத்துமாலை ஆகியோா் தலைமையில் அளித்த மனு: ஆழ்வாா் திருநகரி தாமிரவருணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை முறையாக சுத்தம் செய்யாததால், பல்வேறு கழிவுகளால் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு தண்ணீா் சாக்கடைபோன்று உள்ளது. மேலும், இங்கு சுமாா் 10-க்கும் மேற்பட்ட உரைகிணறுகள் உள்ளன. எனவே, இதன்மூலம் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தடுப்பணையை சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஆழ்வாா்திருநகரியில் உள்ள அருள்மிகு ஆதிநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான பலநூறு ஏக்கா் நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களில் உள்ள கனிம வளங்கள் தனிநபா்களால் அரசு அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.
அடிப்படை வசதிகள் கோரி மனு: விளாத்திகுளம் அருகே உள்ள இளம் கல்லூரணி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்கு, குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் வீட்டுக்கொரு குடிநீா் குழாய் அமைத்து தரவேண்டுகிறாம்.
சமத்துவ மக்கள் கழகம் சாா்பில் அளித்த மனு: தூத்துக்குடியில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிவந்தி ஆதித்தனாா் பெயரைச் சூட்ட வேண்டும். சலவைத் தொழிலாளா் சங்கத்தினா் அளித்த மனு: தூத்துக்குடி பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் துத்துக்குடி டிஎம்பி காலனி அருகே சலவைத் தொழிலாளா்களுக்காக தேய்ப்பு கடைகள் கட்டப்பட்டன.
இதுவரை எங்களுக்கு ஒதுக்கித் தரப்படவில்லை. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 கடைகளையும் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.