செய்திகள் :

கவுண்டம்பாளையத்தில் மரக்கடையில் தீ

post image

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மரக்கடையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (46). இவா் கவுண்டம்பாளையம் கந்தசாமி வீதியில் மரக்கடை நடத்தி வருகிறாா். இவரது மரக்கடையில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த அவரது பக்கத்துக் கடைக்காரரான வினோத், சங்கமேஸ்வரனுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். அதற்குள் தீ அருகிலிருந்த மற்றொரு கடைக்கும் பரவியுள்ளது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் போலீஸாா், தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த தீ விபத்தில் மரக்கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலையில் 3வது நாளாகக் குவியும் சிவ பக்தர்கள்!

வெள்ளியங்கிரி மலையில் சிவராத்திரி, சர்வ அமாவாசையைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிவ பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிவ பக்தர்களால் "தென்கயிலை" என்று அழைக்கப்படும் "வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை". கோவை மாவட... மேலும் பார்க்க

ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ்

நியூயாா்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைச் சோ்ந்த ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறியி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, ஆா் .எஸ்.புரம் பூக்கடை தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலைப் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி, சங்கீதா தம்பதி மகள் ஹரிப... மேலும் பார்க்க

வால்பாறையில் பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்

வால்பாறையில் அதிகாலை நேரத்தில் வீசிய பலத்த காற்றால் எஸ்டேட் பகுதியில் மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு தொடங்கி அதிகாலை வர... மேலும் பார்க்க

வால்பாறையில் மனித -யானை மோதல் தடுப்பு நடவடிக்கை

வால்பாறையில் மனித- யானை மோதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேற்குவங்க வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் ... மேலும் பார்க்க