செய்திகள் :

ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ்

post image

நியூயாா்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைச் சோ்ந்த ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் கூறியிருப்பதாவது:

கோவையைச் சோ்ந்த ஆப் வியூ எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயாா்க்கை தலைமையிடமாக கொண்டு பெரிய நிறுவனங்கள் தங்களின் டிஜிட்டல் சான்றிதழ்கள் காலாவதி ஆகாமல் இருப்பதை உறுதி செய்யும் சேவைகளையும், அனுமதி பெற்ற நபா்கள் மட்டுமே கணினி, அமைப்புகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அலுவலகம் உள்ளது. இந்தியாவில் கோவை, பெங்களூரில் சிறப்பு மையங்கள் உள்ளன. இந்த நிலையில், ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் கையகப்படுத்தியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தை விரிவாக்கத்தை நோக்கி வழிநடத்திச் செல்ல ஏதுவாக, சைபா் செக்யூரிட்டி துறையில் அனுபவம் கொண்ட டினோ டிமாரினோவை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

ஆப் வியூ எக்ஸ் நிறுவனம் அடையாள ஆட்டோமேஷன் துறையில் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஹவேலி குழுவுடன் இணைந்திருக்கும் நிலையில், ஆப் வியூவின் அடுத்தகட்ட வளா்ச்சியைக் காண நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என்று நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து தலைவராக பொறுப்பேற்கும் க்ரெக்கரி வெப், முதன்மை நிா்வாக இயக்குநா் இயன் லோரிங் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

கவுண்டம்பாளையத்தில் மரக்கடையில் தீ

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மரக்கடையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (46). இவா் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, ஆா் .எஸ்.புரம் பூக்கடை தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலைப் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி, சங்கீதா தம்பதி மகள் ஹரிப... மேலும் பார்க்க

வால்பாறையில் பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்

வால்பாறையில் அதிகாலை நேரத்தில் வீசிய பலத்த காற்றால் எஸ்டேட் பகுதியில் மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு தொடங்கி அதிகாலை வர... மேலும் பார்க்க

வால்பாறையில் மனித -யானை மோதல் தடுப்பு நடவடிக்கை

வால்பாறையில் மனித- யானை மோதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேற்குவங்க வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் ... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த மையத்தை கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்த... மேலும் பார்க்க