செய்திகள் :

காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே மத்திய படை வீரர்கள் குவிப்பு!

post image

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு வெளியே இன்று போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதையடுத்து, தில்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

பெற்றோா் விவாக ரத்து: குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் கண்டனம்

‘கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. விவாகரத்து ஆன இந்திய மனைவியிடமிருந்து கு... மேலும் பார்க்க

இபிஎஃப்ஓ சேவைகளை மேம்படுத்த புதிய ஐடி மென்பொருள்: மே-ஜூனில் அறிமுகம்: மத்திய அமைச்சா் மாண்டவியா

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சேவைகளை மேம்படுத்த மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்... மேலும் பார்க்க

சென்னையில் குழாய் வழி எரிவாயு திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. தமிழ்நாடு கடலோர கண்காணிப்பு ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படை... மேலும் பார்க்க

பிகாா்: இறந்ததாக கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிா்ச்சி

பிகாா் மாநிலம் தா்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கடந்த பிப்.26-ஆம் தேதி ரயிலில் அடிபட்டு அந்... மேலும் பார்க்க

ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய துணை முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி

ஆந்திரத்தில் கிராமம் ஒன்றில் பெண்கள் வெறுங்கால்களுடன் நடப்பதைக் கண்ட துணை முதல்வர் பவன் கல்யாண் அனைவருக்கும் காலணிகளை அனுப்பி வைத்தார். ஆந்திர மாநிலம், அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு மற... மேலும் பார்க்க

தாணே: துறவி போல் வேடமிட்டு தங்கச் சங்கிலியை திருடிய கும்பல்

தாணேவில் துறவி போல் வேடமிட்டு முதியவரிடம் தங்கச் சங்கிலியை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவலியில் 75 வயது முதியவரிடம் இருந்து ரூ.1.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள... மேலும் பார்க்க