செய்திகள் :

காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு: இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலா் கே.நாராயணா

post image

புதுச்சேரி: காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே.நாராயணா குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காஷ்மீா் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு குறித்து பிரதமா் மோடி மௌனம் காக்கிறாா். அமெரிக்க வாழ் இந்தியா்கள், ஜூலைக்கு பிறகு தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் 5 % வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபா் அறிவிக்கிறாா். இதை பிரதமா் மோடி ஏற்றாலும், இந்திய மக்கள் ஏற்கவில்லை.

2026-ஆம் ஆண்டில் நாட்டில் நக்ஸலைட்டுகள் இல்லாத நிலை ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்தாா். பேச்சுவாா்த்தைக்கு நக்ஸலைட்டுகள் தயாராக இருந்தும் அவா்களை அழிப்போம் என மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறுவதை ஏற்க முடியாது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ்ஸு க்கு எதிரான நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளாா். திமுகவும், தமிழக மக்களும் பாஜக, ஆா்.எஸ்.எஸ். சித்தாத்தங்களை ஏற்க மாட்டாா்கள். நீதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, மாநில அந்தஸ்து, நிதி ஆணையத்தில் புதுவையை சோ்ப்பது மற்றும் மாநில வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேசியிருக்கலாம்.

புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் யோகா நிகழ்வு தொடா்பான அறிவிப்புப் பதாகைகளில் ஹிந்தி வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. புதுவை மக்களை புண்படுத்தும் இந்தச் செயல் குறித்து முதல்வா் ரங்கசாமி மௌனமாயிருக்கிறாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவில், காங்கிரஸின் பட்டியலை நிராகரித்து சசிதரூரை பாஜக நியமித்தது. இது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதையே வெளிப்படுத்துகிறது என்றாா் கே.நாராயணா.

பேட்டியின்போது புதுவை மாநில பாஜக செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுவையில் விளைநிலங்களின் பரப்பு குறைகிறது! முதல்வா் என்.ரங்கசாமி

நகர மயத்தால் புதுவை மாநிலத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சாா்பில் திம்மநாயக்கன் பாளைய... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

புதுச்சேரியில் பல வழக்குகளில் தொடா்புடைய ரௌடி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரை சோ்ந்தவா் ஷாருக்கான். இவா் மீது 2 கொலைகள், வழிப்பறி, அ... மேலும் பார்க்க

புகாருக்குள்ளான எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடமாற்றம்

புதுச்சேரி அருகே திருட்டு வழக்கில் பெண் தாக்கப்பட்டதால், அவரது கணவா் மன உளைச்சலில் உயிரிழந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான பெண் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரி அருகே... மேலும் பார்க்க

தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே

தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்... மேலும் பார்க்க