செய்திகள் :

காங்கேயம்: சிவன் மலையில் கடல்நீரை வைத்து வழிபாடு - ஆண்டவன் உத்தரவு காரணம் என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக்கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடிப் பேழை வழிபாடு உண்டு. அதாவது சிவன்மலை முருகன் கனவில் வந்து இன்ன பொருளை உத்தரவிட்டதாகக் கூறி, பக்தர்கள் தரும் சிறப்பு பூஜைப் பொருளை வழிபட்டு, பின்னர் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பேழையில் வைப்பது வழக்கம். இதுவே ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது.

வழிபாடு

கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் இடிகரையை சேர்ந்த பெண் பக்தர் பவானி என்பவரின் கனவில் வந்ததாக கடல்நீர் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டது. முன்னதாக கண்ணாடிப் பேழைக்குள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் பிரம்பு மற்றும் சூடம் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு பக்தரின் கனவில் வந்த கடல்நீர் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த பூஜைப் பொருள் மற்றொரு பக்தரின் கனவில் வரும் வரை, கண்ணாடிப் பேழைக்குள் இந்த பொருளை பக்தர்கள் பார்த்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடல்நீரை அப்பகுதியில் உள்ள மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

தஞ்சை பெரிய கோயில் சனி பிரதோஷம்: சிறப்பு அபிஷேகம், வழிபாடு - புகைப்படத் தொகுப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடுதஞ்சாவூர் பெரிய கோயி... மேலும் பார்க்க

மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்: அதிசார குருபெயர்ச்சி பரிகாரம் - ஸ்ரீகாலபைரவ பூஜை

அக்டோபர் 18 முதல் மிதுனத்திலிருந்து கடகத்துக்குப் பெயர்கிறார் குருபகவான். இதுவே அதிசார குருபெயர்ச்சி எனப்படுகிறது. அப்போது குருபகவான் சஞ்சாரப்படி மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 5 ராசிக்காரர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: விமர்சையாகத் தொடங்கிய பெரிய கோயில் நவராத்திரி கொலு | Photo Album

தஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் பெரிய கோவில் கொலுதஞ்சாவூர் ப... மேலும் பார்க்க

ஸ்ரீகாலபைரவ மகாபூஜை! தேய்பிறை அஷ்டமி நாளில் இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்!

ஸ்ரீகாலபைரவ மகாபூஜை! தேய்பிறை அஷ்டமி நாளில் இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்! 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆல... மேலும் பார்க்க

சுதர்சன ஹோமம் யாரெல்லாம் எதற்கெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? சங்கல்பித்தால் சங்கடங்கள் தீரும்!

சுதர்சன ஹோமம் யாரெல்லாம் எதற்கெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா! சங்கல்பித்தால் சங்கடங்கள் தீரும்! ஸ்ரீசுதர்சன ஹோமம் வரும் 2025 செப்டம்பர் 17 வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாம... மேலும் பார்க்க

வாழ்க்கையை எண்ணி பயப்படுகிறீர்களா? நீங்கள் விரும்பியவாறே எல்லாம் நடக்க உதவும் ஸ்ரீசுதர்சன ஹோமம்!

ஸ்ரீசுதர்சன ஹோமம் வரும் 2025 செப்டம்பர் 17 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெற உள்ளது.முன்பதிவு மற்றும் ... மேலும் பார்க்க