செய்திகள் :

Ajith Kumar Racing: 24H சீசனில் 3வது இடம் - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

post image

நடிகரும் கார் பந்தைய வீரருமான அஜித் குமாரின் Ajith Kumar Racing அணி, Creventic 24H European Endurance Championship Series 2025-ல் சீசன் முடிவில் ஒட்டுமொத்தமாக 3வது இடம் பிடித்துள்ளனர்.

இந்த சீசனில் Team BKR / Red Ant ஆதரவுடன் களமிறங்கிய அஜித் குமார் ரேஸிங் குழு, எந்த குறிப்பிட்ட போட்டியிலும் முதலிடம் பெறாவிட்டாலும் சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு Overall-P3 வென்றிருக்கின்றனர்.

அஜித்குமார் ரேஸிங்

992-AM Class கேட்டகிரியில் இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்ற 5 போட்டிகளில் கலந்துகொண்டு ஒரு போட்டியில் மூன்றாம் இடம் வென்றதுடன், மற்ற 4 போட்டிகளில் முதல் 5 இடத்துக்குள் வந்திருக்கிறது அஜித் குமார் ரேஸிங்.

ஒரு போட்டியில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் அங்கீகாரத்தைப் பெற்றதுடன், முழு ஐரோப்பிய 24H சாம்பியன்ஷிப் சீசனையும் முடிவு செய்த முதல் இந்திய அணி என்ற சாதனையையும் பெற்றுள்ளனர்.

அஜித் குமார்

அஜித் குமார் ரேஸிங் குழுவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்!" எனக் கூறியுள்ளார்.

Usain Bolt: "இந்திய உணவுகளில் இதுதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது" - உசைன் போல்ட்

இந்தியாவிற்கு வந்திருக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் 'NDTV' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசியிருக்கும் அவர், "14 வருடத்திற்கு முன்பு நான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். அப்... மேலும் பார்க்க

டெல்லி உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: மைதானத்திற்குள் நுழைந்து கென்ய அதிகாரியைக் கடித்த தெருநாய்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இதற்காக 2,200-க்கும் மேற்பட்ட சர்வதேச பாரா தடகள வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை தந்திர... மேலும் பார்க்க

Usain Bolt: "கனவு நிறைவேறிவிட்டது" - உசைன் போல்ட்டைச் சந்தித்த இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் சர்வதேச தடகள வீரர் உசைன் போல்ட்டை நேரில் சந்திருக்கிறார். இதுதொடர்பாக ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ச... மேலும் பார்க்க

Ind vs Pak: மீண்டும் நேருக்கு நேர் மோதும் இந்தியா, பாகிஸ்தான்; SKY & Co கைகுலுக்குமா, அவமதிக்குமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியிருக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. சூர்யகுமார் ... மேலும் பார்க்க

Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேற்றம்; நடந்தது என்ன?

உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இற... மேலும் பார்க்க

'படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது'- உலக சாதனைப் படைத்த உசைன் போல்ட் வருத்தம்

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனைப் படைத்த உசைன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்... மேலும் பார்க்க