செய்திகள் :

``குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

post image

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துகளை சாப்பிட்ட 11 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 'Sresan Pharmaceuticals' என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இருமல் மருந்துதான் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif). இந்த நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் மருந்துகளை விநியோகம் செய்து வருகிறது.

கோல்ட்ரிஃப் (Coldrif)
கோல்ட்ரிஃப் (Coldrif)

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 11 குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மருந்தை உட்கொண்ட குழந்தைகள் சில நாட்களியே சிறுநீரகம் செயலிழந்து அடுத்தடுத்து உயிரிழந்திருப்தாகக் கூறப்படுகிறது.

வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் 'Diethylene Glycol (DEG)', 'Ethylene Glycol (EG)' நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன.

இதனால் மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் விற்பனையையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் தடை செய்திருக்கிறது. மேலும் அக்டோபர் 1 முதல் இதன் விற்பனையைத் தடுக்கவும், ஏற்கனவே இருக்கும் இருப்புக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது வடமாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வடமாநிலங்களில் இது நடந்திருக்கிறது. இந்தியா முழுவதும் அந்த நிறுவனத்தின் மருந்துகள் விற்பனையாகி வருகிறது. ஆனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என ஒருசில இடங்களில்தான் இந்த உயிரிழப்பு நடந்திருக்கிறது.

ஒருவேளை காலாவதியான மருந்தை உட்கொண்டதாலும் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என்று பேசியிருக்கிறார்.

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் 'பேக் வெட்டிங்' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. திருமண விழா ... மேலும் பார்க்க

"நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ... மேலும் பார்க்க

11 குழந்தைகள் உயிரிழந்திருப்பு; கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை எழுதிக் கொடுத்த டாக்டர் கைது

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 11 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை... மேலும் பார்க்க

"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" - டிடிவி தினகரன்

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அற... மேலும் பார்க்க

"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்” - சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின்மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் த... மேலும் பார்க்க

"மணிப்பூர் வேறு கரூர் வேறு; விஜய் மன்னிப்புக் கேட்ட பிறகும் பிரச்னை ஏன்?" - குஷ்பு பேட்டி

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அ... மேலும் பார்க்க