செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான்

post image

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்ற தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். குறிப்பாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளையும், தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாததை பட்டியலிட்டும் பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 18.09.2025, 19.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. சில காரணங்களினால் சுற்றுப்பயணம் தேதி 19.09.2025, 20.09.2025 மற்றும் 21.09.2025 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 19.09.2025 அன்று நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால், 20.09.2025 அன்று நடைபெற இருந்த நாமக்கல், பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி பிரசாரம் மற்றும் 21.09.2025 அன்று நடைபெற இருந்த திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்கான பிரச்சார பயணம், 04.10.2025 அன்று நாமக்கல், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிகளிலும், 05.10.2025 அன்று திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணம் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் அனுமதி கொடுக்காததால் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 04.10.2025 மற்றும் 05.10.2025ம் தேதி நடக்கவிருந்த சுற்றுப்பயணம், 08.10.2025 மற்றும் 09.10.2025ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

``பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய்" - விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். ஆனால், மதுரை உ... மேலும் பார்க்க

அன்று உங்களுக்கு தளபதி இன்று ஸ்டாலினுக்குத் தளபதி - கொதிக்கும் ஆர்.பி. உதயகுமார்

"தன்னை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் அநாதை ஆக்கினார், அன்று உங்களுக்கு தளபதியாக இருந்தவர்கள் இன்று ஸ்டாலினுக்கு தளபதியாக இருக்கிறார்கள்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் - ராஜேஷ் குமார்

தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்குத் திருட்டைக் கண்டித்து கையெழுத்து பிரசார ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன... மேலும் பார்க்க

ஆரோவில்: `காவு கொடுக்கப்படும் விவசாயப் பண்ணை!’ - அம்பலமான சென்னை ஐஐடி ஒப்பந்தம்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்இந்த நிலையில்தான், ஆரோவில்லில் `பசுமைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்’ அமைக்க, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் ஜெயந்தி ... மேலும் பார்க்க

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கம் பூசப்பட்ட கவசங்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து கேரளா ஐகோர்ட் ... மேலும் பார்க்க

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும... மேலும் பார்க்க