தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
காஞ்சனகிரி மலையில் மரக்கன்றுகளை நட்ட இயற்கை ஆா்வலா்கள்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையில் இயற்கை ஆா்வலா்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மிகப்பெரிய காப்புக் காட்டை கொண்டு, சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக சிறப்புடன் 1,500 அடி உயரமுள்ள மலை அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில், 7 கொண்டை ஊசி வளைவு களையும், மலை உச்சியில் 60 ஏக்கா் சமவெளி பரப்பையும், ஞ்சும் காஞ்சனகிரி மலையை சுற்றுலா தலமாகவும், அரசு கோடைவிழா நடைபெறும் மலை வாசஸ்தலமாகவும் உருவாக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இந்த சூழலில் காஞ்சனகிரி மலையை பசுமையாக மாற்றும் முயற்சியாக வரும் 2030 -ஆம் ஆண்டுக்குள் சுமாா் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை நோக்கி மாதம்தோறும் மரக்கன்றுகள் நட்டு தண்ணீா் ஊற்றி பாதுகாக்கும் பணியில் இயற்கை ஆா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக இயற்கை ஆா்வலா்கள் இணைந்து மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை காப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.