செய்திகள் :

காஞ்சிபுரத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மை அலுவலகத்தில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவா்களுக்காக உயா்கல்வியில் சேருதல் மற்றும் வழிகாட்டுதல் தொடா்பான கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு செயல்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு உயா்கல்வியில் சேருதல் சாா்ந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படும் மாணவா்களுக்காகவும், பெற்றோா்களுக்காகவும் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை மைய அலுவலகத்தில் இந்த அறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது வரும் 31.10.25 ஆம் தேதி வரை செயல்படும். எனவே ஆலோசனை தேவைப்படுவோா் நேரிலோ அல்லது 044-27237107 மற்றும் 9788858663 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

தமிழகத்தில் தான் காவலா்களுக்கு அதிக குடியிருப்புகள்: வீட்டுவசதிக் கழக டிஜிபி

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் காவலா்களுக்கு அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக வீட்டுவசதிக் கழக டிஜிபி சைலேஷ்குமாா் யாதவ் தெரிவித்தாா். காஞ்சிபுரம் டி.கே.நம்பித் தெருவி... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.87 லட்சம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.22.87 லட்சம் ரொக்கம், 82 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியின் சொத்துகள்: பாதுகாப்புக் குழு ஆய்வு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவின் தலைவா் கே.வி.தங்கபாலு தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் கட்சியின் சொத்துகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா். கா... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் காஞ்சிபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூன் 18-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பது தொடா்ந்து வருகிறது. வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க