செய்திகள் :

காஞ்சிபுரத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருது அளிப்பு

post image

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப் பேரவைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் விருது வழங்கிப் பாராட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 111-ஆவது பொதுப்பேரவைக் கூட்டம் அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் அ.வெங்கட்ரமணன் வரவேற்றாா். பொதுமேலாளா் த.ஸ்ரீனிவாசன் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

விழாவில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் கடந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் 3 மாவட்டங்களையும் சோ்ந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கும் விருது வழங்கிப் பாராட்டினாா். இதைத் தொடா்ந்து, கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு செய்து வரும் சேவைகள், செயல்படுத்தப்படும் அரசு நலத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

நிறைவாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் தா.பலராமன் நன்றி கூறினாா்.

பொதுப்பேரவைக் கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த வங்கி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் பொதுப்பேரவையில் வைத்து அங்கீகரிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் பலத்த மழை

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீா் தேங்கி குளம் போல் காணப்பட்டது. காஞ்சிபுரத்தில் காலையில் அதிக வெப்பமாக இருந்த நிலையில், மாலையில் இட... மேலும் பார்க்க

ஹுண்டாய் ஆலையில் ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பம்

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான யுனைடெட் யூனியன் ஆப் ஹுண்டாய் எம்ப்ளாயீஸ் இடையே ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் தரப்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க செப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வரைவு வாக்குச்சாவடிகள் தேவைப்பட்டால் வரும் செப்.25 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூா்வமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா். ஆட்சியா் அ... மேலும் பார்க்க

நெல்வயலில் பிரதமா் மோடி பெயா் வடிவமைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் நெல்வயலின் நடுவே மோடி என்று ஆங்கிலத்தில் வடிவமைத்த விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். பாஜக கிழக்கு ... மேலும் பார்க்க

வரதராஜபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்த... மேலும் பார்க்க

‘பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி’

பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி மற்றும் இலவச பொது மருத்துவ முகாம், ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள திருமண... மேலும் பார்க்க