செய்திகள் :

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!

post image

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை மக்கள் சார்பில், திருப்பதியில் பிக் ஷா வந்தனம் என்ற நிகழ்ச்சி வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை பிக் ஷா வந்தன கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து சமயத்தில், ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை துறவிகள் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிப்பர். இந்த நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத, வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர். இம்மாதங்களில் துறவிகள் உணவு முறையில் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள்

காஞ்சி ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காமகோடி பீடத்தின் இரு ஆச்சாரியார்களும் திருப்பதி விநாயக் நகரிலுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகின்றனர். இதையொட்டி மதுரை பக்தர்கள் சார்பில் ஜூலை 29 ஆம் தேதி, காலை 8 மணிக்கு சிறப்பு பிக் ஷா வந்தனம் மற்றும் பாத பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மதுரையில் பிக் ஷா வந்தன கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் வாழும் காஞ்சி சங்கராச்சாரியாரின் பக்தர்கள், மேற்கண்ட பிக் ஷா வந்தன நிகழ்வில் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெற அழைக்கிறோம். இதில் பங்களிக்க விரும்புகிறவர்கள் 9442052198, 90253 02029 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் பெற்ற பக்தர்கள்!

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.குரு பூர்ணிமா சிறப்பு பூஜைஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத... மேலும் பார்க்க

உடனடியாக திருமணம் நடக்கவும்; திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்; கல்யாண பிராப்த பூஜை

உடனடியாக திருமணம் நடக்கவும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்! கல்யாண பிராப்த பூஜை! இங்கு கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் நடைபெறும் கல்யாண ... மேலும் பார்க்க

சிவகங்கை: 2000 போலீஸார் பாதுகாப்பு; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருத்தேரோட்ட ஏற்பாடு!

நாளை காலை நடைபெறவுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.இதில் 25 ஆயிரத்திற்கும்... மேலும் பார்க்க

பர்கூர் மலை கிராமத்தில் மகா குண்டம் திருவிழா... கடலென திரண்ட மக்கள் - Album

குண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் திருவிழாகுண்டம் ... மேலும் பார்க்க