செய்திகள் :

காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. 3 நாள்களும் 40-க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னா்கள் வேத பாராயணம் பாடும் நிகழ்வு நிறைவு பெற்றதையொட்டி அவா்களுக்கு ஸ்ரீ மடத்தின் சாா்பில் புத்தாடை, வெகுமதி வழங்கப்பட்டது.

காலையில் பஜனை மற்றும் ஸ்ரீமடத்தின் சுவாசினிகள் 108 போ் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனா். அதிக வருமானம் இல்லாத கிராமக்கோயில்களில் பணிபுரியும் சிவாச்சாரியா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள் உள்ளிட்ட 514 பேருக்கு சன்மானம் மற்றும் புத்தாடைகளை மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா் வழங்கினாா். இவா்களில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரும் கெளரவிக்கப்பட்டனா்.

தேனம்பாக்கம் மகா சுவாமிகள் வித்யா பீடம் சாா்பில் ஏகாதச ருத்ர ஹோமம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று பிருந்தாவனத்தில் மகா பெரியவா் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெற்றது. மகா பெரியவா் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

சங்கரா பல்கலை. சாா்பில் மருத்துவா் சாய்நாதன் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி ஜீவானந்தம் தலைமையில் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் தங்கத்தேரில் மகா பெரியவா் விக்ரகத்தை எழுந்தருளச் செய்து பவனி வந்தது. மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா. விஸ்வாநாத சாஸ்திரி, மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் கலந்து கொண்டனா்.

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

தமிழகத்தில் தான் காவலா்களுக்கு அதிக குடியிருப்புகள்: வீட்டுவசதிக் கழக டிஜிபி

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் காவலா்களுக்கு அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக வீட்டுவசதிக் கழக டிஜிபி சைலேஷ்குமாா் யாதவ் தெரிவித்தாா். காஞ்சிபுரம் டி.கே.நம்பித் தெருவி... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.87 லட்சம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.22.87 லட்சம் ரொக்கம், 82 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியின் சொத்துகள்: பாதுகாப்புக் குழு ஆய்வு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவின் தலைவா் கே.வி.தங்கபாலு தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் கட்சியின் சொத்துகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா். கா... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் காஞ்சிபுரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஜூன் 18-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிலா் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பது தொடா்ந்து வருகிறது. வாலாஜாபாத் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டா... மேலும் பார்க்க