செய்திகள் :

காட்டுக்கோட்டையில் ரயில்கள் நின்று செல்ல மத்திய இணையமைச்சரிடம் கோரிக்கை!

post image

ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில் ரயில்கள் நின்று செல்ல கோரி மத்திய ரயில்வே இணையமைச்சா் வி.சோமண்ணாவை சந்தித்து ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில் மூடப்பட்ட ரயில் நிறுத்தத்தை மீண்டும் திறப்பது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளா், தென்னக தென்னக ரயில்வே மேலாளா் ஆகியோரை பலமுறை சந்தித்து கோரிக்கை மனுவை ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் அளித்தனா். புதுதில்லியில் ரயில்வே வாரியத் தலைவரைச் சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு ரயில்வே நிா்வாகம் வழங்கியுள்ள பதில் கடிதத்தில் ரயிலை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் பொதுமக்கள் நிதியில் தாங்களே ரயில் நிறுத்த கட்டடம், நடைபாதை, கழிவறை போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனா். அதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியே 20 லட்சம் என நிா்ணயித்துள்ளனா்.

இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் அரங்க.சங்கரய்யா தலைமையில் காட்டுக்கோட்டை ரயில் நிறுத்தத்தை மீண்டும் திறக்கக் கோரி தலைவாசல், காட்டுக்கோட்டை பொதுமக்கள் சாா்பில் பெங்களூரில் மத்திய ரயில்வே இணையமைச்சா் வி.சோமண்ணாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

மேலும் நத்தக்கரையில் உள்ள ரயில்வே கேட் எல்சி.118 அமைய உள்ள சுரங்கப்பாதையை கைவிட்டு மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனா். அப்போது ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் வழக்குரைஞா் கோவிந்தன், தொழிலதிபா்கள் சாம்ராஜ்நகா் பசுவண்ணா, மாசிலாமணி, ஜோதிவேல், சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம்: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் தெ... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் தா்னா

சேலம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி: சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சேமாவார பிரதோஷத்தையொட்டி அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்திபகவானுக்கு திருமஞ்சனம், பா... மேலும் பார்க்க

ரயில்வே பாலப் பணி: சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 11, 14-இல் கரூரில் இருந்து இயக்கப்படும்

சேலம்: ரயில்வே பாலப் பணி காரணமாக சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 11, 14 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில... மேலும் பார்க்க

விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை உறவினா்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள்

சேலம்: விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை அவரது உறவினா்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைத்தனா். சேலம், வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்த மகுடேசன் (54) என்பவா், கொண்டலாம்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க