செய்திகள் :

காதலரைக் கரம்பிடித்த தமிழும் சரஸ்வதியும் தொடர் நடிகை!

post image

தமிழும் சரஸ்வதியும் தொடர் பிரபலம் விஜே சங்கீதாவு தனது நீண்டநாள் காதலர் அரவிந்த் சேஜுவை கரம் பிடித்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் விஜே சங்கீதா. இவர் அழகு சீரியல் மூலம் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் மலர் பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அத்தொடரில் இருந்து விலகினார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் 'வசு' பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதேபோல, கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சேஜு. இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். வெப் தொடர்கள், குறும்படங்கள் என யூடியூபில் நன்கு அறியப்பட்டவர்.

இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் பிப்.15-இல் ‘ராமாயணம்’ அனிமேஷன் படம் திரையிடல்

தற்போது, விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொடரான அய்யனார் துணை தொடரின் மதுமிதாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

இதனிடையே, விஜே சங்கீதா கனா காணும் காலங்கள் வெப் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் அரவிந்த் சேஜுவை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக முன்னதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், அரவிந்த் சேஜு - சங்கீதாவுக்கு உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவர்களின் திருமண தொடர்பான விடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரவிந்த் - சங்கீதா தம்பதிக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!

வள்ளியூர் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததுநெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்குச் சொந்தமான மணல் அள்ளும் லாரியை ஓட்ட... மேலும் பார்க்க

விடுதி அறையில் மாணவி தற்கொலை!

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கோட்டயத்தின் பரம்புழாவைச் சேர்ந்த அனீட்டா பினாய் (வயது 21), இவரது பெற்ற... மேலும் பார்க்க

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்க... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணு... மேலும் பார்க்க

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழி... மேலும் பார்க்க

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க