செய்திகள் :

காதல் நடிகைக்கு ஜெட் விமானம் பரிசளித்த சிறைப் பறவை?!

post image

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சிறை தண்டனையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் காதல் பரிசு அளித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

மோசடி வழக்கில் கைதாகி தில்லியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், சிறையிலிருந்தவாறே ஜாக்குலினுக்கு சுகேஷ் கோடிக்கணக்கிலான மதிப்பில் வைர நகைகள், குதிரை முதலானவை பரிசாக அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், சிறையில் இருக்கும் சுகேஷை, தான் காதலிக்கவில்லை என்று நடிகை ஜாக்குலின் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால், இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படமும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஜாக்குலினுக்கு தனியார் ஜெட் விமானத்தை, சிறையிலிருந்தவாறே சுகேஷ் பரிசளித்ததாக சமூக ஊடகங்களில் கூறுகின்றனர். மேலும், விமானத்தில் ஜேஎஃப் என்று குறிப்பிட்டு, காதல் கடிதத்தையும் சுகேஷ் அனுப்பியதாகக் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:சூர்யா - வெங்கட் அட்லூரி கூட்டணியில் புதிய படம்?

பண மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, சிறையில் நட்பாகப் பழகி வந்த தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ. 200 கோடியை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த வழக்குக்காகவும் சுகேஷ் சிறை தண்டனை பெற்றதாகக் கூறுகின்றனர்.

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் க... மேலும் பார்க்க