செய்திகள் :

கானூா்-பழையனூா் கால்வாய் படுகை அணை கட்டுமானப் பணி: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் அருகே வைகை ஆற்றுக்குள் புதிதாகக் கட்டப்படும் கானூா்-பழையனூா் கால்வாய்களுக்கான படுகை அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருப்புவனம் புதூா்-மடப்புரம் இடைப்பட்ட வைகை ஆற்றின் குறுக்கே கானூா்-பழையனூா் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 40.27 கோடியில் படுகை அணைக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வைகையாற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் பழையனூா், ஆலங்குளம், முதுவன்திடல், ஆனைக்குளம், மேலச்சொரிக் குளம், கீழச்சொரிக்குளம், பத்துப்பட்டி, அச்சங்குளம் ஆகிய கிராமங்களில்

உள்ள 2860.27 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோன்று, கானூா் உள்ளிட்ட

5 கண்மாய்கள் மூலம் 4,115.46 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர, திருப்புவனம், மடப்புரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.

இந்த நிலையில், படுகை அணை கட்டுமானப் பணிகளை சருகனியாறு வடிநிலக் கோட்ட நீா்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளா் சீ. ரமேஷ், உதவி செயற்பொறியாளா் மோகன்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, கட்டுமானப் பணிக்கு தரமான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் அவா்கள் அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின் போது, உதவிப்பொறியாளா் அழகுராஜா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க