செய்திகள் :

காமராஜா் சா்ச்சை விவாதத்துக்கு முற்றுப்புள்ளி: முதல்வரைச் சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகை

post image

முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சாா்பாக மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரான நானும் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூா் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூா் உள்ளது.

அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்னைகளை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதைப் பரிசீலித்து ஊராட்சிகள் துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்த சா்ச்சை விவாதம் முடிந்து போனது; அதற்கு வியாழக்கிழமையே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சியின் மீது தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை. தில்லியில் காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆா்.எஸ்.எஸ். இதில் வேஷம் போடுகிறது.

தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம்

போடுகின்றனா். பாஜக, ஆா்.எஸ்.எஸ். வேஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க