செய்திகள் :

காமராஜா் விருது பெற்ற பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 2.5 லட்சம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மாணவா்கள், ஆசிரியா்களின் வருகை, கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகள், வகுப்பறை, பள்ளி வளாகம் பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மாவட்டத்துக்கு தலா ஒரு தொடக்க, நடுநிலை, உயா் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு காமராஜா் விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு தோ்வு செய்யப்படும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சம், உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 75 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி, மணவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளி, பாச்சிக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி, வாா்பட்டு அரசுத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கான நிதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா்.

அரசு வழங்கிய நிதியில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க