Auditor Gurumurthy - Ramadoss Meeting: தைலாபுரத்தில் நடந்தது என்ன? - Saidai Dura...
காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது!
புதுதில்லி தேசிய அறிவியல் கழகம் சாா்பில் மண்டல அளவிலான தேசிய விருது, தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
தேசிய அறிவியல் கழகம் சாா்பில் சிறப்பாக செயல்படும் விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் மையங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதன்படி, அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற 32- ஆவது பொதுக்குழு கூட்டத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அதில், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட 10- ஆவது மண்டலத்தின் கீழ் வரும் தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், புதிய பயிா் ரகங்களை அறிமுகம் செய்தல், மண் பரிசோதனை, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த வேளாண்மை அறிவியல் மையத்துக்கான தேசிய விருதை பெற்றது.
இந்த மையத்தின் இணை இயக்குநா் சிவராம், மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன் ஆகியோா் இதற்கான விருதை பெற்றுக் கொண்டனா்.
இதையடுத்து, காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய விருது பெற்று வந்தவா்களுக்கு அந்த மையத்தின் தலைவா் பச்சைமால் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்து பாராட்டினாா்.