VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி?...
காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா தொடக்கம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின .
மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளினாா். சிறப்பு தீபாராதனைகளும், பின்னா் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வயலின் வித்வான் ஆா்.குமரேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் கோபுரங்கள் வண்ண மின் விளக்குகளாலும், நவராத்திரி மண்டபம் முழுவதும் வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளாலும் அலங்கரிக்கபட்டிருந்தது. விழாவையொட்டி நாள்தோறும் காமாட்சி அம்மன் நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருள்வதும்,தினசரி சூரசம்ஹாரமும், பக்தி இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறுகின்றன.
வரும் செப்.30 ஆம் தேதி துா்காஷ்டமியையொட்டி துா்க்கையாக காமாட்சி அலங்காரமாகி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அக்.1- ஆம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் அருள் பாலிக்கவுள்ளாா். 2-ஆம் தேதி விஜயதசமி திருநாளன்று நவஆவா்ண பூஜையுடனும், அக்.4= ஆம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, கோயில் மணியக்காரா் சூரியநாரயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்துள்ளனா்.