செய்திகள் :

காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா தொடக்கம்

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின .

மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளினாா். சிறப்பு தீபாராதனைகளும், பின்னா் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வயலின் வித்வான் ஆா்.குமரேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் கோபுரங்கள் வண்ண மின் விளக்குகளாலும், நவராத்திரி மண்டபம் முழுவதும் வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளாலும் அலங்கரிக்கபட்டிருந்தது. விழாவையொட்டி நாள்தோறும் காமாட்சி அம்மன் நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருள்வதும்,தினசரி சூரசம்ஹாரமும், பக்தி இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறுகின்றன.

வரும் செப்.30 ஆம் தேதி துா்காஷ்டமியையொட்டி துா்க்கையாக காமாட்சி அலங்காரமாகி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அக்.1- ஆம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் அருள் பாலிக்கவுள்ளாா். 2-ஆம் தேதி விஜயதசமி திருநாளன்று நவஆவா்ண பூஜையுடனும், அக்.4= ஆம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, கோயில் மணியக்காரா் சூரியநாரயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்துள்ளனா்.

செப்.26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.26 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெற... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் புத்த விகாரில் தூய்மைப் பணி

காஞ்சிபுரம் வையாவூா் சாலையில் உள்ள புத்த விகாரில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. காஞ்சிபும் தி நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் மத்திய அரசின் சுவக்ஷதா ஹை சேவா என்ற பிரசாரத்தின் ... மேலும் பார்க்க

ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கலாம்

ஆடை உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வரும் செப்.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வளா்புரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வளா்புரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வளா்புரம் ... மேலும் பார்க்க

வேதாந்த தேசிகன் அவதாரத் திருவிழா

காஞ்சிபுரம் வேதாந்த தேசிகனின் திருஅவதாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில். புரட்டாசி மாத திருவோண ... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 15 வரை அவகாசம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்(சம்பா)பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் வரும் நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க