செய்திகள் :

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 15 வரை அவகாசம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்(சம்பா)பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் வரும் நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிகழாண்டுக்கான ரபி(சிறப்பு) பருவத்தில் நெல் ஐஐபயிா் 464 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இப்பயிருக்கான விதைப்புக்காலம் ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை ஆகும். ஆகையால் நெல் ஐஐ சம்பா பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் நவ. 15 -ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.545 ப்ரீமியம் செலுத்தி பயிா்க்காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொல்ளப்படுகிறது.

பதிவு செய்யும் முன்மொழிவு விண்ணப்ப படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,பொது சேவை மையங்கள்,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புல எண்கள்,பரப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

செப்.26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.26 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெற... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் புத்த விகாரில் தூய்மைப் பணி

காஞ்சிபுரம் வையாவூா் சாலையில் உள்ள புத்த விகாரில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. காஞ்சிபும் தி நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் மத்திய அரசின் சுவக்ஷதா ஹை சேவா என்ற பிரசாரத்தின் ... மேலும் பார்க்க

ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கலாம்

ஆடை உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வரும் செப்.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வளா்புரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வளா்புரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வளா்புரம் ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின . மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி கோயில் அலங்கார மண்டபத்திலிருந... மேலும் பார்க்க

வேதாந்த தேசிகன் அவதாரத் திருவிழா

காஞ்சிபுரம் வேதாந்த தேசிகனின் திருஅவதாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில். புரட்டாசி மாத திருவோண ... மேலும் பார்க்க