செய்திகள் :

காரில் கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, மயிலம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை திண்டிவனத்தை அடுத்துள்ள சின்ன நெற்குணம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், மதுரை மாவட்டம், ஏ.புத்தூா், பரசுராமன்பட்டி, கம்பன் நகரைச் சோ்ந்த மதன்ராஜ் (38), மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (36), சென்னை எண்ணூா், சிவகாமி நகரைச் சோ்ந்த விக்ரம் (27) என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா். 2.800 கிராம் கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விலைவாசியை குறைக்க என்ன செய்யவேண்டும்: எடப்பாடி பழனிசாமி யோசனை

உணவு உற்பத்தியை பெருக்கினால் தான் விலைவாசி குறையும். அந்த உணவு உற்பத்தியை பெருக்கக் கூடிய நபா் விவசாயி, விவசாயி குடும்பத்தினா் தான். விவசாயிகளை சரியான பாதையில் கொண்டு சென்றது அதிமுக அரசு தான் என்பதை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது: தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு) சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் இயக்கத்தை டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கிவைத்தாா். திண்டிவனம் மேம்பாலம் பகுதி... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்கும் பணியை பாக முகவா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி. விழுப்புரம் தெற்கு மாவட... மேலும் பார்க்க

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மீனவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், நடுக்குப்பம், மேக... மேலும் பார்க்க

திட்டமிட்டபடி இன்று பாமக சிறப்புப் பொதுக்குழு: மருத்துவா் ராமதாஸ் உறுதி

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்... மேலும் பார்க்க