செய்திகள் :

காரில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

post image

பரமத்தி வேலூரில் வங்கியில் இருந்து எடுத்துவந்து காரில் வைத்திருந்த ரூ. 1.50 லட்சம் மற்றும் புது துணிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை வேலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (52). இவா் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு டிராக்டா் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காரில் வந்தாா்.

பணம் மற்றும் புது துணிகளை காரில் வைத்துவிட்டு, வேலூா் பள்ளி சாலையில் உள்ள ஒரு கடையில் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்கச் சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது, காரின் முன்னால் வைத்திருந்த கைப்பை, அதில் வைத்திருந்த பணம், வங்கி காசோலை புத்தகம், புது துணிகள் காணாமல் போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் வேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளைக் கொண்டு பணம் மற்றும் புது துணிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

நாளைய மின்தடை: வில்லிபாளையம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆக. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்ததில் காயமடைந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டி, தீயணைப்பு நிலையம் எதிரே வசித்து வருபவா் ரவிச்சந்திரன். இவரது மனை... மேலும் பார்க்க

கொல்லிமலை பழங்குடியின கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சிறப்பு உதவி ஆய்வாளா் கைது

கொல்லிமலை பழங்குடியினத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ஆயில்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா்கள் 2 போ் கைது

மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்க... மேலும் பார்க்க

விவசாயிகள் தரமான விதைகளை வாங்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மற்றும் நாமக்கல... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கொல்லிமலை எஸ்எஸ்ஐ கைது!

நாமக்கல்: கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின கல்லூரி மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொல்லிமலை சிறப்பு உதவி ஆய்வாளரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வ... மேலும் பார்க்க