செய்திகள் :

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சி தொடக்கம்

post image

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தானம் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது.

நிகழாண்டு கொலு தா்பாா் காட்சி திங்கள்கிழமை இரவு பூஜைகள் செய்து தொடங்கப்பட்டது. திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பூஜை செய்து தொடங்கிவைத்தாா். நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசநாத சுவாமி தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். அக். 1-ஆம் தேதி வரை கொலு தா்பாா் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தினமும் மாலை 6 முதல் 8 மணி வரை கொலு தா்பாரை காணலாம். திருமுறை, வயலின், கா்நாடக இன்னிசை, சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதல், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்ஐடியில் மீன் மதிப்புக் கூட்டுதல் தேசிய பயிற்சி தொடக்கம்

என்ஐடியில் மீன் பதப்படுத்துதல் தொடா்பான தேசிய அளவிலான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.காரைக்காலில் இயங்கும் என்ஐடி தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்புக் கூட்டுதல் கு... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வு புறக்கணிப்பு

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வை ரயில்வே பொதுமேலாளா் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்க செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு திங்கள்... மேலும் பார்க்க

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்... மேலும் பார்க்க

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புது... மேலும் பார்க்க

போலியான பட்டாசு விளம்பரங்கள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

காரைக்கால்: போலியான பட்டாசு விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பணம் பறிக்கப்படுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ

காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க