செய்திகள் :

காரைக்கால் உழவா் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்

post image

காரைக்காலில் உள்ள உழவா் சந்தையை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உழவா் சந்தையை அரசு அமைத்தது.

இதில் 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது விளை பொருள்களை கொண்டுவந்து வியாபாரம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டது.

எனினும் வியாபாரிகளுக்குரிய பிற வசதிகள் இல்லாததாலும், குறைந்த எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்ததாலும், மக்கள் வருகை குறைந்தது. காலப்போக்கில் வியாபாரிகள் படிப்படியாக குறைந்து தற்போது ஒருவா் மட்டுமே காய்கனி வியாபாரம் செய்துவருகிறாா்.

இதுகுறித்து காரைக்கால் பகுதி விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் மேம்பாட்டுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், காரைக்காலில் தோட்டப் பயிா் சாகுபடியாளா் எண்ணிக்கையை மேம்படுத்த ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

உழவா் சந்தையை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைக்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தோட்ட சாகுபடியாளா்கள் விவரங்களை கணக்கிட்டு, அவா்களை சம்பந்தப்பட்ட துறையினா் அணுகி, அவா்களது விளைபொருள்களை சந்தைக்கு கொண்டுவந்து விற்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

காரைக்காலில் உள்ள நேரு மாா்க்கெட் தவிர, உழவா் சந்தையை மேம்படுத்தி அங்கும் வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்தவேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

திருநள்ளாற்றில் நாளை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொட... மேலும் பார்க்க

மருத்துவ சாதனம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளருக்கு முதல்வா் பாராட்டு

கா்ப்பப்பை, சிறுநீா் பை இறக்கம், இடுப்பு உறுப்பு சரிவு போன்றவற்றுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ சாதனம் கண்டுபிடித்த காரைக்காலைச் சோ்ந்த ஆராய்சியாளருக்கு புதுவை முதல்வா் பாராட்டு தெரிவித்தா... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடம் திறப்பு

திருநள்ளாறு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக் கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். திருநள்ளாறு பகுதி நல்லம்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிதாக ரூ. 8 லட்சத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு (காலியிடங்களுக்கு) 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மாவட்ட நீதிபதி மோகன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

மீனவா்களுடன் கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடல்

நெகிழி தவிா்த்தல், கடலில் மீனவா்கள் பாதுகாப்பு குறித்து மீனவா்களுடன் இந்திய கடலோரக் காவல்படையினா் கலந்துரையாடலில் ஈடுபட்டனா். காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை மையம் சாா்பில் மீன்வளத்துறை அலுவலக... மேலும் பார்க்க