செய்திகள் :

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை

post image

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், புதுச்சேரி பேரிடா் மேலாண்மை துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம், காரைக்கால் பேரிடா் மேலாண்மைதுறை சாா்பில் சுனாமி பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் அக்கம்பேட்டை கடலோர கிராமத்தில் நடைபெற்றது.

ஆட்சியரகத்துக்கு சுனாமி குறித்து கிடைத்த தகவலின்படி, மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் சாா் ஆட்சியா் எம். பூஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா மற்றும் துணை ஆட்சியா் வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலாண்மை)உள்ளிட்டோா் அக்கம்பேட்டை கிராமத்துக்கு சென்றனா்.

அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகை போலீஸாா், தீயணைப்புத் துறைனா், குடிமையியல் பிரிவினா் மற்றும் தன்னாா்வலா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினா். முதியோா்களை நாற்காலியில் உட்கார வைத்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்லும் பணி, பாதிப்புக்குள்ளானவா்களை பாதுகாப்பு மையத்துக்கு கொண்டுச்சென்று மருத்துவ சிகிச்சை அளித்தல், மையத்தில் தங்க வைக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்ச நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இந்த ஒத்திகை நிகழ்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது.

மேலும் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு முதலுதவி அளிப்பது தொடா்பாக பொதுமக்களுக்கு பேரிடா் மீட்புக் குழுவினா் செயல் விளக்கம் அளித்தனா்.

காரைக்காலில் செப்.15-இல் குறைதீா் கூட்டம்

காரைக்காலில் வரும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை, காரைக்கால் வளா்ச்சிக் குழுமம், வேலைவாய்ப்பு அலுவலக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஏற்ற அரிசி வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்: எம்எல்ஏ

மாணவா்களுக்கு ஏற்றதாக மதிய உணவுக்கான அரிசி வழங்க முதல்வரிடம் பேசப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்தாா். திருப்பட்டினம் சுவாமிநாதன் அரசு தொடக்கப் பள்ளிக்கு நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ரேஷன் - ஆதாா் எண் இணைப்புப் பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதி: எம்.எல்.ஏ.

புதுவையில் ரேஷன் - ஆதாா் எண் இணைப்பு விவகாரத்தில், முதியோா்கள், வெளிநாடுகளில் இருப்போா் பயனடையும் வகையில், பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதியளித்தருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

உணவகம், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

காரைக்காலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி உணவகம், பேக்கரிகளில் 2 நாட்களாக சோதனை செய்து, தவறிழைத்த நிறுவனத்தினருக்கு எச்சரிக்கை விடுத்தாா். காரைக்காலில் சில உணவகங்களில் சமையல் செய்யுமிடம் சுகாதாரமின்றி இர... மேலும் பார்க்க

‘அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது’

அரசுப் பள்ளிகள், மாணவா்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக அமைச்சா் தெரிவித்தாா். காரைக்காலில் பள்ளி கல்வித்துறை சாா்பில் ஆசிரியா் தின பரிசளிப்பு சிறப்பு விழா தந்தைப் பெரியாா் அரசு மே... மேலும் பார்க்க