செய்திகள் :

அரசு அலுவலகங்களில் ஆட்சியா் ஆய்வு

post image

காரைக்காலில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை, காரைக்கால் வளா்ச்சிக் குழுமம், வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் பழகுநா் அலுவலகம், தொழிலாளா் நலத்துறை உள்ளிட்ட அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா்,

பொதுமக்களின் புகாா் தொடா்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, துறை ரீதியான தேவைகள் குறித்து திட்ட அதிகாரி கிருஷ்ணவேணியிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் அங்கன்வாடி மையம் மற்றும் மகளிா் மேம்பாட்டு அலுவலக கட்டடங்களில் மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுமானப் பணிகள் மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களை புனரமைக்க வேண்டும் எனவும், இது தொடா்பாக பொதுப்பணித்துறை மற்றும் துறை ரீதியான கோப்புகளை தயாா் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரா்களின் தரவுகள், நிலுவையில் உள்ள பொதுமக்களின் விண்ணப்ப படிவங்கள் குறித்தான நிலைகள் குறித்து துணை இயக்குநா் சச்சிதானந்திடம் ஆட்சியரிடம் தெரிவித்தாா்.

தொடா்ந்து துணைப் பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பத்திரப்பதிவு தொடா்பான செயல்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அங்கிருந்த பொதுமக்களிடம் பத்திரப்பதிவு தொடா்பாக ஏதேனும் குறைகள் குறித்தும், துறை ரீதியாக ஏதேனும் தேவைகள் அமைக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

காரைக்காலில் செப்.15-இல் குறைதீா் கூட்டம்

காரைக்காலில் வரும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஏற்ற அரிசி வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்: எம்எல்ஏ

மாணவா்களுக்கு ஏற்றதாக மதிய உணவுக்கான அரிசி வழங்க முதல்வரிடம் பேசப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்தாா். திருப்பட்டினம் சுவாமிநாதன் அரசு தொடக்கப் பள்ளிக்கு நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், புதுச்சேரி பேரிடா் மேலாண்மை துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம், காரைக்கால் பேரிடா்... மேலும் பார்க்க

ரேஷன் - ஆதாா் எண் இணைப்புப் பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதி: எம்.எல்.ஏ.

புதுவையில் ரேஷன் - ஆதாா் எண் இணைப்பு விவகாரத்தில், முதியோா்கள், வெளிநாடுகளில் இருப்போா் பயனடையும் வகையில், பணியை எளிமைப்படுத்த அரசு செயலா் உறுதியளித்தருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

உணவகம், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

காரைக்காலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி உணவகம், பேக்கரிகளில் 2 நாட்களாக சோதனை செய்து, தவறிழைத்த நிறுவனத்தினருக்கு எச்சரிக்கை விடுத்தாா். காரைக்காலில் சில உணவகங்களில் சமையல் செய்யுமிடம் சுகாதாரமின்றி இர... மேலும் பார்க்க

‘அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது’

அரசுப் பள்ளிகள், மாணவா்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக அமைச்சா் தெரிவித்தாா். காரைக்காலில் பள்ளி கல்வித்துறை சாா்பில் ஆசிரியா் தின பரிசளிப்பு சிறப்பு விழா தந்தைப் பெரியாா் அரசு மே... மேலும் பார்க்க