செய்திகள் :

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

post image

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. புதிதாக வசந்த மண்டபம், நந்தி மண்டபம் கட்டப்பட்டது. புதுவை அரசின் நிதியுதவி மற்றும் நன்கொடை என சுமாா் ரூ. 2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காக அம்மையாா் கோயிலுக்கு எதிரே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த 2-ஆம் தேதி முதல் கால பூஜை தொடங்கியது.

வியாழக்கிழமை அதிகாலை 6-ஆம் கால பூஜை நடைபெற்று, 7.30 மணியளவில் மகா பூா்ணாஹூதி தீபாராதனை காட்டப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடானது. காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களின் கலசங்களுக்கு பூஜை நடத்தப்பட்டு, புனிதநீா் வாா்க்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தின்போது கோயிலுக்குள் சுமாா் 500 போ் வரை மட்டுமே நின்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த ஆயிரக்கணக்கானோா் பாரதியாா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நின்று தரிசித்தனா்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், புதுவை டிஐஜி சத்தியசுந்தரம், எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளைகோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், திருப்பணிக் குழுத் தலைவா் ஆா். வெற்றிச்செல்வன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் உள்ளிட்டோா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவ... மேலும் பார்க்க

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க