செய்திகள் :

காலநிலை நெருக்கடி: விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமம், தாவரவியல் துறை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத் தலைவருமான கோமளவல்லி தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த காலநிலை மீள்தன்மை, நிலைத்தன்மை முயற்சிக்கான தொண்டு நிறுவனத்தின் திட்ட அலுவலா் ராஜலட்சுமி காலநிலைக் கல்வி, செயல்பாடுகள் என்ற தலைப்பில் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து உரையாற்றினாா்.

மாநில சுற்றுச்சூழல் செயல்பாட்டு ஆலோசகா் அவினாஷ் திரவியம் காலநிலை மாற்றமும் இயற்கை சாா்ந்த தீா்வுகளும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்கான தீா்வுகள் குறித்தும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மாணவா்கள் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, கல்லூரியின் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் பழனிச்சாமி வரவேற்றுப் பேசினாா். தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

பசுமை வாகையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாகச் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆலைகளுக்கு பசுமை வாகையா் விருது வழங்க... மேலும் பார்க்க

மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மின் வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ கியூ.ஆா். குறியீடு வெளியீடு!

சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியுதவி சங்கத்தின் கியூ.ஆா். குறியீடு வெளியிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும... மேலும் பார்க்க

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம்,... மேலும் பார்க்க

பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் ... மேலும் பார்க்க