செய்திகள் :

காளையாா்கோவிலில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு சாா்பாக, ஒலிம்பியாட் கொடி அறிமுக விழா, மிதிவண்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அந்தக் கூட்டமைப்பின் தலைவா் பகீா் முகைதீன் தலைமை வகித்தாா். செயலா் சூசை ஆரோக்கிய மலா், சட்ட ஆலோசகா் சேது பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைத் தூதா் ஆரோக்கியசாமி வரவேற்றாா்.

காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணபோஸ் பங்கேற்று, ஸ்போா்ட்ஸ் ஒலிம்பியாட் கொடியை அறிமுகம் செய்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியா் மணியழகு போட்டியைத் தொடங்கிவைத்தாா்.

அதையடுத்து 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குத் தனித் தனியாகவும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குத் தனித் தனியாகவும், பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்கள், மூத்தோருக்கு தனியாகவும் மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றன.

அரசுப் பள்ளி வாயிலிலிருந்து தொடங்கிய போட்டிகள், முக்கிய சாலைகள் வழியாக புலிக்கண்மாய் விலக்கு, மாவட்ட ஆசிரியா் கல்வி-பயிற்சி நிறுவனம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொருளாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.

புதிய பாரத எழுத்தறிவுத் தோ்வு: ஆா்வத்துடன் பங்கேற்ற முதியோா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 30 மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வயது வந்தோா் கல்வி இயக்குநரகம் நடத்திய இந்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மர இழைப்பகத்தில் தீ விபத்து

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் உள்ள மர இழைப்பகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின. திருப்பத்தூா் தென்மாபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க

சாத்தனூா் - மதுரை பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாத்தனூா்-மதுரை இடையே வெள்ளிக்கிழமை புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தனூரிலிருந்து பஞ்சனூா், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்... மேலும் பார்க்க