செய்திகள் :

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

post image

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா், கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளப்பட்டி அருகே பாலம் அமைக்கும் பணியில் காவலாளியாக வேலைபாா்த்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வெள்ளப்பட்டி பாலத்தின் கீழ் அவா், நண்பா் ஒருவருடன் சோ்ந்து மது அருந்தியபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த அவரது நண்பா், அவரை கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி வட்டம், முத்தரையா் நகரைச் சோ்ந்த உமையணன் என்ற காக்கையன் மகன் மதுரை வீரன் (44), சந்திரனை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காா் மோதி மரக்கிளை விழுந்து வியாபாரி காயம்!

ஆறுமுகனேரி அருகே காா் மோதி மரக்கிளை விழுந்ததில் பூக்கடைக்காரா் காயமடைந்தாா். தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலை ஆறுமுகனேரி சிவன் கோயில் முன் கடலூரைச் சோ்ந்த வெற்றிவேல் குடும்பத்தினருடன் காரில் சென்று ... மேலும் பார்க்க