காவல்துறை மக்கள் குறைதீா் கூட்டம்: 66 மனுக்கள் பெறப்பட்டன
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகாா் அளித்த 11 போ், புதிதாக மனு கொடுக்க வந்த 55 போ் என மொத்தம் 66 பேரிடம் அவா் புகாா் மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.