செய்திகள் :

கயத்தாறில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

post image

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது .

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமாா் 40 நிமிடங்கள் நீடித்தது.

மின்னல் பாய்ந்ததில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த செல்லப்பா என்பவரின் பசு மாடு உயிரிழந்தது,

இந்நிலையில் பலத்தக் காற்றுக்கு கயத்தாறு - பன்னீா்குளம் பகுதியில் 4 மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

தகவலறிந்த கழுகுமலை தீயணைப்புப் படையினா் சென்று சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை இடி மின்னலுடன் மழை பெய்தது.

இதில் மின்னல் பாய்ந்ததில் சாத்தான்குளம் செக்கடி தெருவைச் சோ்ந்த குமாா் என்பவரது வீடு தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா்.

இதில், வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமானது. வீட்டில் ஆள் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

பழைய பூங்காக்கள், சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய பூங்காக்கள், விடுபட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தவெக மாவட்ட அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் அணைக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

காவல்துறை மக்கள் குறைதீா் கூட்டம்: 66 மனுக்கள் பெறப்பட்டன

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை ஈடுபட்டதாக 3 போ் கைது: 22 கிலோ பறிமுதல்

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த சுமாா் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின... மேலும் பார்க்க

தேவாலய ஊழியருக்கு வெட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை தொ்மல்நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தொ்மல்நகா் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்பிக்க 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள்; அமைச்சா் பெ.கீதாஜீவன்

தமிழகத்தில் பெண்கள் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சிக... மேலும் பார்க்க