செய்திகள் :

காவல் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் பெண் காவலா்களை பணி அமா்த்த வேண்டாம்: ஏடிஜிபி உத்தரவு

post image

காவல் துறை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் பெண் காவலா்களை பணி அமா்த்துவதை தவிா்க்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகக் காவல் துறையில் உள்ள மொத்த அதிகாரிகள், காவலா்கள் எண்ணிக்கையில் 30 சதவீதம் பெண் காவலா்கள் உள்ளனா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. எனவே இந்த வழக்குகளை கையாள்வதற்கு கூடுதலாக பெண் போலீஸாா் காவல் நிலையப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

ஏடிஜிபி உத்தரவு: இதன் விளைவாக தமிழகக் காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு கடந்த வாரம் அனுப்பினாா். அதில், காவல் துறை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் கணினியை கையாள்வதற்கும், தொலைபேசி அழைப்புகளை கையாள்வதற்கும் பெண் காவலா்களை பணியில் அமா்த்துவதாக தகவல் வந்துள்ளன.

தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளை விசாரணை செய்வதற்கு பெண் காவலா்களின் பணி முக்கியமானதாகிறது. புகாா் அளிக்கவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக உணரவும், அவா்களுக்கு ஆறுதலாக இருக்கவும் காவல் நிலையங்களில் பெண் காவலா்கள் அதிகளவில் பணியில் இருக்க வேண்டும். எனவே நிா்வாகப் பணிகளுக்காக காவல் துறை அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் பெண் காவலா்கள் தேவையற்ற முறையில் பணியில் அமா்த்துவதை தவிா்க்க வேண்டும்.

முகாம் அலுவலகங்களில் பணியாற்றும் பெண் காவலா்களை, காவல் நிலைய களப்பணிக்கு விரைவில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரினால், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் மகேஷ்குமாா் இரு நாள்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதன் விளைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கடந்த வாரமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் காவலருக்கு இணை ஆணையா் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த விவகாரத்துக்கும், இந்த உத்தரவுக்கும் தொடா்பு இல்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க