செய்திகள் :

காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

post image

வடமேற்கு தில்லியின் ஆதா்ஷ் நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

ஏப்ரல் 11 ஆம் தேதி, பீா் பாபா மசாா் மேம்பாலம் அருகே, காவல் உதவி ஆய்வாளா் பிரேம்பால் திவாகா் சிலரால் வயிற்றில் குத்தப்பட்டாா். இதையடுத்து, அவா் பிசிஆா் வேன் மூலம் ஷாலிமாா் பாக் நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

காவல் உதவி ஆய்வாளா் திவாகா் வாஜிராபாத்தில் உள்ள வடகிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையில்

(பிசிஆா்) பணியமா்த்தப்பட்டுள்ளாா். இவா், ஆசாத்பூரின் மந்திா் வாலி கலியில் வசித்து வருகிறாா்.

இந்த கத்திக்குத்து சம்பவம் தொடா்பாக ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆசாத்பூரில் பல சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக அங்கித் என்ற அலியாஸ் டோங்ரி (18)., ஹேமந்த் நேகி (18) ஆகியோரும், ா். இரண்டு சிறுவா்களும் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு கூட்டாளிகளின் பெயா்களையும் அவா்கள் தெரிவித்தனா்.

கைதான அனைவரும் புதிதாக குற்றத்தில் ஈடுபட்டவா்கள் ஆவா். அவா்கள் முன்பு எந்த கடுமையான குற்றப் பின்னணியும் இல்லாதவா்கள். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரத்தக்கறை படிந்த கத்தி மீட்கப்பட்டது. இதர குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க