செய்திகள் :

காவல் துறையை இனி தூங்கவிடமாட்டேன்: அண்ணாமலை

post image

இன்று இரவு முதல் காவல் துறையை தூங்கவிடமாட்டேன் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற மாநில தலைவர் அண்ணாமலை இன்று(மார்ச் 17) கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அண்ணாமலை - காவல் துறையினர் இடையே நீண்டநேர வாக்குவாதத்துக்குப் பிறவு இன்றிரவு 7 மணிக்கு அண்ணாமலை மற்றும் பாஜகவினரை காவல் துறையினர் விடுதலை செய்தனர்.

இதையும் படிக்க: பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வரும் 22 ஆம் தேதி மீண்டும் சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். காவல் துறையினர் இனி நிம்மதியாக தூங்கக் கூடாது.

பாஜக தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் படத்தை மாட்டுவார்கள். ” என்றார்.

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக பொது சுகா... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தோல்வி: எதிா்ப்பு-154; ஆதரவு-63

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவை பதவி நீக்கக் கோரும் அதிமுகவின் தீா்மானம் திங்கள்கிழமை தோல்வியடைந்தது. பேரவையில் தீா்மானத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது. எனினும் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்றும் சென்னை வானிலை... மேலும் பார்க்க

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை அருகே திங்கள்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

தமிழை பயிற்று மொழியாக்கச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழைப் பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மொழிக் ... மேலும் பார்க்க

திமுக-பாஜக நாடகம்: தவெக விமா்சனம்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் விமா்சனம் செய்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க