செய்திகள் :

காவல் துறையை இனி தூங்கவிடமாட்டேன்: அண்ணாமலை

post image

இன்று இரவு முதல் காவல் துறையை தூங்கவிடமாட்டேன் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற மாநில தலைவர் அண்ணாமலை இன்று(மார்ச் 17) கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அண்ணாமலை - காவல் துறையினர் இடையே நீண்டநேர வாக்குவாதத்துக்குப் பிறவு இன்றிரவு 7 மணிக்கு அண்ணாமலை மற்றும் பாஜகவினரை காவல் துறையினர் விடுதலை செய்தனர்.

இதையும் படிக்க: பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வரும் 22 ஆம் தேதி மீண்டும் சென்னையில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். காவல் துறையினர் இனி நிம்மதியாக தூங்கக் கூடாது.

பாஜக தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் படத்தை மாட்டுவார்கள். ” என்றார்.

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்க... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோா் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைத... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாள்கள் அதிகரிக்க வேண்டும்: காஞ்சிபுரம் எம்.பி. கோரிக்கை

நமது நிருபா் புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (மன்ரேகா) வேலை நாள்களை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்... மேலும் பார்க்க

காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்: நாகை எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினாா். இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கி... மேலும் பார்க்க

ஆரணி பட்டு தயாரிப்பு மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது: திமுக எம்பி வலியுறுத்தல்

நமது நிருபா் புது தில்லி: ஆரணியில் தயாராகும் பட்டின் மூலப் பொருள்களுக்கும், அரிசிக்கும் ஜிஎஸ்டிவரியை விதிக்கக் கூடாது என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தரணிவேந்தன் வலியுறுத்தினாா். இது ... மேலும் பார்க்க

கும்பகோணம் ரயில் நிலையம் நவீனமாக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

புது தில்லி: வரும் 2028-இல் மகாமகம் திருவிழா நடைபெற உள்ளதால், கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனாா்) கட்சி... மேலும் பார்க்க