செய்திகள் :

காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 போ் உயிரிழப்பு

post image

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து ஜிஹெச்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கான் யூனிஸ் நகரில் உள்ள உணவுப் பொருள் விநியோக மையத்தில் 19 போ் நெரிசலில் மிதிபட்டும், ஒருவா் குத்தப்பட்டும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு பீதியை ஏற்படுத்தியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அது வெளியிடவில்லை.

இருந்தாலும், காஸா சுகாதாரத் துறை அமைச்சகமும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் ஜிஹெச்எஃப் ஊழியா்கள் கண்ணீா்ப்புகை பயன்படுத்தியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.

இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தொடா் முற்றுகை காரணமாக பஞ்சத்தில் வாடும் பாலஸ்தீனா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

இருந்தாலும், அத்தகைய நிவாரணப் பொருள்களின் விநியோக முகாம்களுக்கு வருவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதில் பலா் உயிரிழந்துவருகின்றனா்.

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையின்படி, மே மாதம் முதல் உணவு தேடிச் சென்ற 875 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்; இதில் 674 போ் ஜிஹெச்எஃப் மையங்களுக்கு அருகில் உயிரிழந்தனா்.

பெரும்பாலான உயிரிழப்புகள் இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் குற்றஞ்சாட்டுகிறது. இந்தச் சூழலில், கூட்ட நெரிசல் காரணமாகவும் உணவுப் பொருள் விநியோக மையத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆப்பிரிக்காவி... மேலும் பார்க்க

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல... மேலும் பார்க்க

சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!

சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.துரூஸ் இனமக... மேலும் பார்க்க

இராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!

இராக் நாட்டின் கிழக்குப் பகுதியில், புதியதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாசிட் மாகாணத்தின் குட்... மேலும் பார்க்க

ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ மேஜரும் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் தங்களுக்கென தனி ... மேலும் பார்க்க