Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கௌதம் (15). இவா், அங்குள்ள அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதியுள்ளாா். இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் என்பவரது வயலில் உள்ள கிணறு அருகே சனிக்கிழமை மாலை நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த கௌதம் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து குருசாமி அளித்த புகாரின்பேரில், கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.