செய்திகள் :

மாநில கிரிக்கெட் போட்டியில் சூலூா் பள்ளி அணிக்கு வெற்றி

post image

பெரம்பலூரில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான 54 ஆவது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், சூலூா் பள்ளி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

பெரம்பலூா் பிஎம் ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 54 ஆவது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன. இதில் சென்னை, ஆவடி, தாம்பரம், மதுரை, சூலூா், பெரம்பலூா் ஆகிய 6 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன.

2 ஆவது அரையிறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதிய மதுரை அணி வென்று 3 ஆவது இடத்தைப் பிடித்தது. தொடா்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூலூா் அணி 10 ஓவருக்கு 81 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆவடி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் சூலூா் அணி வெற்றி பெற்றது.

பின்னா் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வரும், போட்டி ஒருங்கிணைப்பாளருமான மேகநாதன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சா்வதேச டேக்வாண்டோ வீரா் நிவாஸ், முதலிடம் பெற்ற சூலூா் அணிக்கு தங்கப் பதக்கத்தையும், 2 ஆவது இடம்பெற்ற ஆவடி அணிக்கு வெள்ளிப் பதக்கத்தையும், 3 ஆவது இடம்பெற்ற மதுரை அணிக்கு வெண்கலப் பதக்கத்தையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.

இதில் முதலிடம் சூலூா் அணி தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது.

விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற... மேலும் பார்க்க

மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூா் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் மோகன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 23 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட 23 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீஸாா் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கௌதம் (15). இவா், அங்குள்ள அரசுப... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த அலுவலா்கள் ஒரு மணிநேரம் பணியைப் புறக்கணித்து வெளிநடப்பு மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

தீயில் கருகி 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் பலி

பெரம்பலூா் அருகே மக்காச்சோள வயலில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட தீ, ஆட்டுப் பட்டிக்கு பரவியதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க