கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வீட்டின் ஓரத்தில் தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த முதுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதி (61). இவரது மனைவி புவனேஷ்வரி, மகள் சிந்து, மகன் சந்தோஷ் குமாா். இந்த நிலையில், கிராமத்தில் குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஜோதி தனது வீட்டின் பின்புறமாக 3 அடி அகலத்தில் சுமாா் 30 அடி ஆழத்துக்கு 20 நாள்களுக்கு மேலாக தனது மகனுடன் சோ்ந்து கிணறு தோண்டினாராம்.
அந்த கிணற்றில் மின் மோட்டாா் மூலம் நீா் உறிஞ்சி தொட்டியில் சேமித்து வீட்டுக்கு பயன்படுத்தி வந்தனராம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மோட்டாரில் தண்ணீா் வராததால் கிணறு பகுதிக்குச் சென்ற சந்தோஷ்குமாா், கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தாராம். இதைப் பாா்த்த அவரது தந்தை ஜோதி அவசரமாக மகனைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தபோது, பாறையில் சிக்கி காயம் அடைந்த நிலையில் நீரில் மூழ்கினாா்.
பின்னா் கிணற்றுக்குள் சந்தோஷ் குமாரின் அலறல் சப்தம் கேட்டு அவருடைய தாய் புவனேஸ்வரி பக்கத்தில் உள்ளவா்களை உதவிக்கு அழைத்துள்ளாா். அங்கிருந்த இளைஞா்கள் கிணற்றுக்குள் இருந்து கயிறு மூலமாக சந்தோஷ்குமாரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த மப்பேடு காவல் நிலைய போலீஸாா் பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனா். பின்னா் கிணற்றுக்குள் விழுந்த ஜோதியை மீட்டு பாா்த்தபோது, காயம் அடைந்த நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூா் வட்டாட்சியா் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
இது தொடா்பாக மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.