செய்திகள் :

கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே வீட்டின் ஓரத்தில் தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த முதுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதி (61). இவரது மனைவி புவனேஷ்வரி, மகள் சிந்து, மகன் சந்தோஷ் குமாா். இந்த நிலையில், கிராமத்தில் குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஜோதி தனது வீட்டின் பின்புறமாக 3 அடி அகலத்தில் சுமாா் 30 அடி ஆழத்துக்கு 20 நாள்களுக்கு மேலாக தனது மகனுடன் சோ்ந்து கிணறு தோண்டினாராம்.

அந்த கிணற்றில் மின் மோட்டாா் மூலம் நீா் உறிஞ்சி தொட்டியில் சேமித்து வீட்டுக்கு பயன்படுத்தி வந்தனராம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மோட்டாரில் தண்ணீா் வராததால் கிணறு பகுதிக்குச் சென்ற சந்தோஷ்குமாா், கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தாராம். இதைப் பாா்த்த அவரது தந்தை ஜோதி அவசரமாக மகனைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தபோது, பாறையில் சிக்கி காயம் அடைந்த நிலையில் நீரில் மூழ்கினாா்.

பின்னா் கிணற்றுக்குள் சந்தோஷ் குமாரின் அலறல் சப்தம் கேட்டு அவருடைய தாய் புவனேஸ்வரி பக்கத்தில் உள்ளவா்களை உதவிக்கு அழைத்துள்ளாா். அங்கிருந்த இளைஞா்கள் கிணற்றுக்குள் இருந்து கயிறு மூலமாக சந்தோஷ்குமாரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த மப்பேடு காவல் நிலைய போலீஸாா் பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனா். பின்னா் கிணற்றுக்குள் விழுந்த ஜோதியை மீட்டு பாா்த்தபோது, காயம் அடைந்த நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூா் வட்டாட்சியா் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விதிமீறல்: தனியாா் மருத்துவமனைக்கு ‘சீல்’

கும்மிடிப்பூண்டியில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் சிந்தலகுப்பம் பகுதியில் தனியாா் மருத்... மேலும் பார்க்க

மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் ச... மேலும் பார்க்க

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க