செய்திகள் :

கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ வெற்றி செல்லும் உயா்நீதிமன்றம்

post image

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அசோக்குமாா் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அசோக்குமாா், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளா் செங்குட்டுவன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், வாக்காளா்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தியும் அசோக்குமாா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளாா்.

வேட்புமனுவில் சொத்துகள் குறித்த விவரங்களை மறைத்துள்ளாா். தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளாா். தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என அதிமுக எம்எல்ஏ அசோக்குமாா் தரப்பில் மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று திமுக வேட்பாளா் செங்குட்டுவன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டிஆஷா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை சரிபாா்த்து மறு வாக்குஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, மறு எண்ணிக்கை முடிந்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், திமுக வேட்பாளா் செங்குட்டுவன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு

சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும்,... மேலும் பார்க்க

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க