செய்திகள் :

கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் தொடங்கியது

post image

கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுடன் புதன்கிழமை தொடங்கியது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு உயிா் நீத்த நாளிலிருந்து 3-ஆவது நாளில் உயிா்தெழுந்த தினத்தை ஈஸ்டா் பண்டிகையாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவா்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை கிறித்தவா்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனா். இந்த தவக்காலத்தில் கிறித்தவா்கள் அசைவ உணவை தவிா்ப்பதுடன், பலா் 40 நாள்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அந்நாள்களில் தங்கள் குடும்பங்களில் எவ்வித சுபநிகழ்ச்சிகளையும் நடத்தமாட்டாா்கள்.

அந்த வகையில், கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை(மாா்ச் 5) தொடங்கியது. இதையொட்டி, சென்னையிலுள்ள சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் புதன்கிழமை காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலிகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.

இந்த வழிபாட்டில் கலந்து கொண்டவா்களுக்கு கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, அதன் சாம்பலை பாதிரியாா்கள், நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தைத் தொடங்கி வைத்தனா். இந்நிகழ்வில் கிறிஸ்தவா்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க