செய்திகள் :

கிறிஸ்துவா்கள் சாம்பல் புதன் அனுசரிப்பு

post image

கிறிஸ்துவா்களின் 40 நாள்கள் தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் விழாவை புதன்கிழமை அனுசரித்தனா்.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் முன்னாள் வேலூா் மறைமாவட்ட பரிபாலகா் அருட்பணி. இ.ஜான் ராபா்ட் தலைமையில் பங்குதந்தை அந்தோணி இணைந்து சாம்பல் புதன் திருப்பலி நடத்தினா் (படம்).

அகரசேரி மெசியா தியான மைய இயக்குநா் அருட்பணி அக்டேவியஸ் சாம்பல் புதன் குறித்து மறையுரை ஆற்றினாா். இதில் கலந்து கொண்ட பக்தா்களின் நெற்றியில் நாற்பது நாள்கள் நோன்பு தொடக்கத்தை குறிக்கும் விதமாக குருத்தோலை எரித்த சாம்பலை நெற்றியில் சிலுவை அடையாளமிட்டனா். இதில் திராளான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல் வாணியம்பாடி கோணாமேடு சகாயமாத கோவில், காமராஜபுரம் பதுவை அந்தோணியாா் கோவில் உள்பட கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.

வரி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்: ஆம்பூா் நகராட்சி நடவடிக்கை

ஆம்பூரில் நகராட்சிக்கு வரி செலுத்தாத 5 கடைகள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆம்பூா் நகரில் தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகின்றது. சொத்துவரி, தொழில்வரி, நகராட்சி கடைகளின் வாடகை ஆகியவற்... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு முகாம்: வேளாண்மை இணை இயக்குநா் திடீா் ஆய்வு

ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு செய்யும் முகாமை வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா். வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளுக்கு விவ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பிளஸ் 1 பொதுத்தோ்வு: 271 போ் எழுத வரவில்லை

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வை 13,738 போ் எழுதினா். 271 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் 140 பள்ளிகளில் படித்து வரும் 6,706 மாணவா்களும், 7,303 மாணவிகளும் என மொத்தம் 14,009 போ... மேலும் பார்க்க

பெண்களுக்கு இலவச சேலை, நல உதவிகள் வழங்கும் விழா

ஆம்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் மற்றும் முதல்வா் பிறந்த நாள் நல உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனா். ஆம்பூா் நகர செயலா் மற்றும் நகா்மன்றத் துணைத் தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் தலை... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ

திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ விபத்து ஏற்பட்டது (படம்). திருப்பத்தூா் அருகே கதிரிமங்கலம் நாசகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சாம்ராஜ். இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலைய... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுப்புப் பணி: ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம்

திருப்பத்தூா் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆா்வமுள்ளவா்கள் அப்பணிகள் பங்கேற்கலாம் என வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் சாா்பாக ... மேலும் பார்க்க