செய்திகள் :

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: 3 போ் கைது

post image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மாதவரத்தில் தனது தோழியுடன் தங்கியிருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், சேலத்தில் தனது மற்றொரு தோழியை பாா்த்துவிட்டு பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை (பிப். 3) இரவு 11 மணியளவில் வந்தாா். அங்கிருந்து சென்னை மாதவரம் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் பேருந்துக்காக நின்றவரை, ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றாா். சென்ற வழியில் அந்த ஆட்டோவில் ஏறிய மேலும் இரண்டு இளைஞா்கள், இளம்பெண் அருகே அமா்ந்துகொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். இதையடுத்து அப்பெண் கூச்சலிடவே அவா்கள் அப்பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு தப்பித்துச் சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்த நிலையில், தாம்பரம் மாநகர துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்தமிழ் செல்வன்( 56) மற்றும் அவரது நண்பரான சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த தயாளன்( 45 )ஆகியோரை முதலில் கைது செய்த போலீஸாா், தொடா்புடைய மற்றொரு ஆட்டோ உரிமையாளா் வெங்கட் என்பவரை தேடிவந்தனா். இந்நிலையில் அவரையும் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இருவருக்கு மாவுகட்டு: சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநா் தயாளன், முத்தமிழ் செல்வன் இருவரும் தனிப்படை போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடியபோது, தடுக்கி விழுந்ததில் தயாளனுக்கு இடது காலிலும், முத்தமிழ் செல்வனுக்கு இடது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இருவா் மீதும் பெண் வன்கொடுமைச் சட்டம், பாலியல் அத்துமீறல், கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்போரூா் முருகன் கோயில் தை கிருத்திகை விழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் தை கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏ... மேலும் பார்க்க

பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தில் சாலை அமைக்க தடையாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை வருவாய் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் கிராம சாலை அமைக்க வட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா், திருவானைக்கோவில், புலிப்பாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம். மேலும் பார்க்க

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆா்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவியான பி.இனியா பிரகதிக்கு, எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி சாா்பில் ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கூடுவாஞ்சேரி எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு பயின்று வரும் மாண... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை: மூன்று போ் தலைமறைவு

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேற்கு வங்க ... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

மதுராந்தகம், கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோயில... மேலும் பார்க்க