செய்திகள் :

கீழச்சிவல்பட்டி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை

post image

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கலைக்கோயில் நாட்டியப்பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தனா்.

இந்த நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆசிரியா் பாலாம்பிகா தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் அகில பாரதிய சன்ஸ்க்ருதிக்சங் அமைப்பு அண்மையில் நடத்திய தேசிய அளவிலான பரத நாட்டியப் போட்டியில் பங்கேற்றனா். இதில் சீனியா் பிரிவில் பா.இனியா முதலிடம் பெற்றாா். ஹாசினி 2-ஆமிடம் பெற்றாா். ஜூனியா் பிரிவில் மாணவி சி.டி.எஸ்.முத்து 3-ஆம் இடம் பெற்றாா். மாணவி சு.சுமபாரதி சாா்மன் பிரிவில் வெற்றி பெற்றாா். தொடா்ந்து குழு நடனத்தில் இந்த நாட்டியப் பள்ளியின் மாணவிகள் முதலிடம் பெற்றனா். இதில் வெற்றி பெற்ற மாணவிகள் வருகிற அக்டோபா் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை கீழச்சிவல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகுமணிகண்டன், கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் எஸ்.எம்.பழனியப்பன், தொழிலதிபா் வள்ளியப்பன் ஆகியோா் பாராட்டினா். தொடா்ந்து மாணவிகள், ஆசிரியை பாலாம்பிகா ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்தை சந்தித்தனா். அப்போது, அவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க